ஆணியில் அறைந்தது
ஆணவம் செய்தது…
அளவிலா கருணையோடு
அன்றுயிர்த் தெழுந்த
ஆண்டவன் செய்கையோ
அன்பின் எல்லையது...
மாயையால் மனிதர்
மாண்பினை இழந்தனர்
மாசிலா தேவனோ
மன்னித்து அருளினார்...
இன்றிந்த நாளிலே
இறைவன் அருளினை
இதயத்தில் ஏற்றுவோம்...
என்றும் போற்றுவோம்....
புனித வெள்ளி
நம் மனத்தை புனிதமாக்கட்டும்!!!
உமா
3 comments:
NICE
வாழ்க வையகம்.. வளர்க அவனது கருணை...
https://www.scientificjudgment.com/
அருமை பகிர்வுக்கு நன்றி...
Post a Comment