கீதாஞ்சலி
தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.
1.
இந்த முடிவற்ற பிறவியில்
என்னை
பிணித்திருக்கிறாயே
அதுவே உன் இச்சை போலும்.
மிகவும் பலவீனமான
இப்பாண்டத்தை
அடிக்கடி
வெறுமையாக்கி
மீண்டும் மீண்டும்
புத்துயிரை
நிரப்புகிறாய்
உனது சின்னஞ்சிறு
குழலில்
அமுத கானத்தை
காடு, மலை,
பள்ளத்தாக்கெங்கிலும்
இசைக்கிறாய்
உனது திருக்கரம்
தீண்டியதில்
எனது நெஞ்சம்
இன்பத்தின் எல்லையையே
தாண்டி விடுகிறதே!!!
உனது பெருமையை
பாடத் துவங்குகிறதே!!!
எனது சின்னஞ் சிறிய
கைகள் நிரம்பி வழியும் படி
பல அரிய கொடைகளை
நீ தருகிறாய்..
உனது கருணை
அளப்பரியது..
பல காலங்களாய்
தொடர்வது..
இன்னும்
முடியாமல்
தொடர்ந்து கொண்டே
இருப்பது…
பாரதியும் அதனால் தான்..
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
என்று பாடுகிறார்...
தொடர்வோம்..
No comments:
Post a Comment