அன்று
அம்மா மடி விட்டு
ஓட ஆரம்பித்தேன்…
இளமையில்
இன்பங்கள் அனைத்தும்
துய்த்தேன்…
குடும்பம் குழந்தைகள்
கடமைகள் கடந்து
வந்தேன்…
துன்பங்களும்
எனக்கு
துணையானதைக்
கண்டேன்.
திரும்பிப் பார்க்கும் போது
எனது
இரகசியங்கள்
எனைக் கண்டு
சிரிப்பதைப்
பார்க்கிறேன்…
நான் வாங்கிய
முதல் வண்டி…
எனது கடைசி
பயணத்திற்கு
உதவாது …
எனது
சொத்துக்கள்
கைமாறிப்போகும்…
என்னுடன்
துணையாக
என் துணைவியும்
வரயியலாது….
இனி
எதற்கு
என்னுடையது என்று ஒன்று
எனது
இருப்பை
நியாயப்படுத்த
இனி ஈயப் போகிறேன்…
சிறுவர்களுக்கு
கல்வி
பெரியவர்களுக்கு
உணவு
முயற்சி செய்பவருக்கு
இயன்ற உதவி
எனது
இருப்பை
நியாயப்படுத்த
இனி ஈயப் போகிறேன்…
அப்பாடா…
இப்பொழுதுதான்
நான் எனக்காக
வாழ்கிறேன்…
1 comment:
உங்கள் blog நன்றாக உள்ளது நீங்கள் blogger சென்று mobile phone உள்ள theme change செய்தால் படிக்க நன்றாக இருக்கும்
Post a Comment