Thursday, July 24, 2025

தீதும் நன்றும்

இடிக்கின்ற மேகம் மின்னல்

இசையோடு கருவி வானம்

கொடுக்கின்ற மழையின் தூறல்

கொள்கின்ற தன்மை யாலே

குடிக்கின்ற நீரும் ஆகும்

குழம்பியதே சேறும் ஆகும்

பெறுகின்ற இயல்பி னாலே

பெற்றதன் நன்மை மாறும்


வருகின்ற தீதும் நன்றும்

வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்

தருகின்ற தீமை தன்னை

தண்ணீரைப் போலே ஏற்பாய்

கிடைக்கின்ற அனுப வந்தான்

கற்கின்ற பாடம் ஆகும்!!

போகின்ற திசைகள் எல்லாம்

புகழோடு வாழ வைக்கும்

No comments: