இடிக்கின்ற மேகம் மின்னல்
இசையோடு கருவி வானம்
கொடுக்கின்ற மழையின் தூறல்
கொள்கின்ற தன்மை யாலே
குடிக்கின்ற நீரும் ஆகும்
குழம்பியதே சேறும் ஆகும்
பெறுகின்ற இயல்பி னாலே
பெற்றதன் நன்மை
மாறும்
வருகின்ற தீதும் நன்றும்
வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்
தருகின்ற தீமை தன்னை
தண்ணீரைப் போலே ஏற்பாய்
கிடைக்கின்ற அனுப வந்தான்
கற்கின்ற பாடம் ஆகும்!!
போகின்ற திசைகள் எல்லாம்
புகழோடு வாழ வைக்கும்…
No comments:
Post a Comment