Monday, July 24, 2023
நட்பு
தொலைபேசியிலிருந்து
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்
நட்பு என்ன
பணமா?
பதவியா?
இல்லை
வலைத்தளங்களில் விழும்
“லைக்’ குகளா?
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்.
அடடா!
என் கவிதைகளைப்
பகிர
நண்பர்களில்லையே!!!
தனிமையில்
நான் எழுதிய
கவிதைகளைப்
பகிர்ந்துக் கொள்ள
நல்ல
நட்பிற்காக
காத்திருக்கிறேன்…
கிழிசல்
கவிதை புத்தகத்தை
நீ
திருடிக் கொண்டுவிட்டாய்…
இல்லை என்று
சத்தியம் செய்தாய் நீ..
என்னிடம் கேட்டால்
நானே கொடுத்திருப்பேனே!
என் இதயத்தின்
கிழிசலில்
நட்பு
மாட்டிக் கொண்டு
உடைந்து போனது….
கவலை மற
இரத்தக் கசிவு
எனக்குத் தான்…
சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்
'நடப்பது நடக்கும்
கவலை மற'…
ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?
'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…
என் துக்கங்களை
எங்கே
எறிவது….
நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…
ஆஹா
இது என்ன!
என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!
என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!
காதலிக்கின்றேன்..
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?
------
Sunday, April 17, 2022
புனித வெள்ளி
Thursday, March 31, 2022
இனியவைகூறல்
வேலினை ஒத்த கண்கள்
வில்லினை ஒத்த நெற்றி
தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்
தாமரை நிறத்தால் ஒக்கும்
தோளிரண்டு மூங்கில் என்றும்
துடியிடை மின்னல் போலும்
ஆயிழை தன்னைக் கண்டார்
யாரவள் மனத்தைக் கண்டார்???
Thursday, March 10, 2022
பூவா? புயலா? பெண்!!
அன்று!
அவள் கண்களில்
ஒளி இருந்தது
அவளோ!
இருட்டு அறையில்
சிறைப்பட்டிருந்தாள்…
சுதந்திர வெளிச்சம்
சூழ்ந்த போது
அவள் பார்வையோ
பறிக்கப்பட்டது…
பறந்த வெளியில்
பாதை தெரியவில்லை…
அடிமைச் சிறைவிட்டு
அடியெடுத்து வைத்தாலும்
ஆண்களின் பார்வை
அச்சமூட்டியது…
அடிமைக் கூடு
அழிக்கப்பட்டப் போது
அவளது
அழகிய சிறகுகள்
சிதைந்தே இருந்தன…
எதிர்பார்ப்புகளால்
அவள்
இயக்கம்
தடுக்கப்பட்டது…
உலகம்
பட்டுப்பூச்சியை
பருந்தாய்
பறக்கச் சொன்னது…
பறந்தால் மட்டுமே
பெண் எனச் சொன்னது…
இருட்டு அறையிலும்
இயங்கிய கண்கள்
வெளிச்சம் கண்டு
விலகிச் செல்லுமா?
சின்னச் சிறகை
மெல்ல விரித்தே
வானம் அளந்தது.
வண்ணத்துப் பூச்சி..
பறந்த வெளிதான்
பாதை வகுத்து
பயணம் தொடர்ந்தாள்
பெண்
கிழட்டுப்
பார்வைகளை
கிழித்து எறிந்தாள்
புதிய உலகம்
புதிய பார்வை
புதிய பாதை
புதிய பயணம்
புதிதாய் என்றும்
பொலிவாள் பெண்…
பூவும் அல்ல
புயலும் அல்ல
அவள் பெண்…
(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது)
Friday, February 18, 2022
முடிவு உன்கையில்
Saturday, September 11, 2021
பாரதி நினைவில்
Wednesday, June 09, 2021
நலம் தா ஞாயிறே !!!
Sunday, May 30, 2021
கத்தி யின்றி ரத்த மின்றி
Friday, April 02, 2021
காத்திருப்பு
Sunday, March 21, 2021
நதிக்கரை நாகரிகம்
நாணலே மெத்தையாய்
நாணமே போர்வையாய்
நல்லதொரு தூக்கம்
விடியலை வரவேற்கும்
விழிப்பு
உள்ளத்தில் அமைதி
உண்மையால் உறுதி
ஆற்றை குடித்து
காற்றில் மிதந்து
காய் கனி
கடித்து உண்டு
வேட்டை யாடியும்
விளை யாடியும்
சில மணிகள்
இயற்கையைப் படித்து
இதயத்தால் வாழ்க்கை
கள்ளமில்லா காதல்
கடுப்பில்லா மனம்
களைப்பில்லா குணம்
காட்டாற்று வெள்ளம்
கரைப்புரள
காலம் கரைக்கட்டியது
ஏட்டைக் கிழித்தது
எழுத்தாணி
இன்றைய நாகரீகம்
எழுந்தது…
Monday, March 15, 2021
கம்பன் கவித்தேன்
Thursday, May 28, 2020
கொரோனா - கல்விக் கொள்கை
Thursday, May 21, 2020
என் மனமென்னும் மேடையில்
Sunday, May 10, 2020
குறள் தாழிசை
Saturday, May 09, 2020
குறும் பா
Wednesday, May 06, 2020
மல்லிகை பூச்சரம்
உன் சின்னச் சிரிப்பு