Friday, June 30, 2006

தாய்மை

நீராடி நோன்பிருந்து
நித்தம் தவமிருந்து-தான்
கருவுற்ற நேரத்தில்
கவலை மறந்து
சிரித்திருந்து சீராய்
உணவு அருந்தி-பிள்ளை
பெற்றுவிட்ட போதினிலும்
தன்னுயிரை அமுதாக்கி
ஊட்டுவித்து மகிழ்ந்திருந்து
உள்ளம் நிறைந்திருந்து-தான்
உற்ற பசி மறந்திருநது
விழித்திருக்கும் வேளையிலும்
உடனிருந்து விளையாடி
இமைமூடி இருக்கையிலும்-சேய்தன்
பக்கத்தில் துணையிருந்து
பார்த்திருப்பாள் காத்திருப்பாள்
பிள்ளையவன் பெரிதாகி-அயல்நாடு
பறந்த பின்னும்
அவனுக்காக காத்திருப்பாள்
கூட்டிப்போகவில்லை என்றாலும்
கொள்ளிப்போட வந்திடுவான்-மகன்...

No comments: