Thursday, May 07, 2009

மெய்யடா மெய்யடா மெய்

இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை.

போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின்
கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும்
நயவஞ் சகமெண்ணி நெஞ்சம் கொதிப்பது
மெய்யடா மெய்யடா மெய்.

[திரு.அமுதா திருத்திய சில மாற்றங்களுடன்]

1 comment:

அகரம் அமுதா said...

தோழி 'உமா'புனையும் தொய்வில்'வெண் பா'க்கண்டால்
ஆழிபோல் என்நெஞ்சம் ஆர்ப்பரிக்கும் -வாழியெனச்
செய்யடா செய்யடா செய்யோர் கவியதுவே
மெய்யடா மெய்யடா மெய்.