Tuesday, July 27, 2010

உண்மையின்பம்

தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]


நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்

கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே

நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ

ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

2 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கஞ்சன் கையில் காசு!!

ஊருணி நீரில் உப்பு கலந்து,
ஒருவருக்குமுதவாது போல்,
பாரினில் பணம் சேர்த்து,
பானையில் அடைத்து வைத்து,
சேறினில் விழுந்த சோறு போல்,
ஏறினில் பூட்டப் படாத எருதாய்விடும்!

உமா said...

மிக்க நன்று திரு ராமமூர்த்தி, வாழ்த்துக்கள்