Monday, June 16, 2014

நல்லார் நெஞ்சில்
புல்மேல் பனியாய்
அல்லல் இருளை
கொல்லும் சுடரே

சுடரின் துணையொடு
படர்ந்திடு கொடிபோல்
இடர்தரு தொல்லை
கடந்திட அருள்செய்

செய்வதைத் துணிந்து
பொய்யதை நீக்கி
உய்ந்திட எனக்கே
மெய்யதைக் காட்டு

காட்டில் வழியே
பாட்டின் பொருளே
மீட்டும் இசையில்
கூட்டுக் கலையே

கலையே அழகே
விலையில் மணியே
மலையென புவியில்
நிலைத்தநற் தமிழே

தமிழே அமிழ்தாம்
தமிழர் உணர்வீர்
உமியை தவிர்த்துநற்
தமிழ்பா தருவீர்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// செய்வதைத் துணிந்து
பொய்யதை நீக்கி
உய்ந்திட எனக்கே
மெய்யதைக் காட்டு ///

சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் சகோதரி...

உமா said...

தொடர்ந்து என் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் திரு தனபாலன் அவர்களுக்கு என் நன்றி. தொடர்வோம்.