Tuesday, February 23, 2010

முதுமை


விளம்/மாங்காய் + மா + தேமா

களைப்புற்ற காலம் என்றே

கருதிட வேண்டா நாளும்

அலைந்திங்கே பெற்ற பாடம்

அனுபவம் தன்னில் உண்டாம்

இளையவர்க் குதவும் வண்ணம்

இயம்பிட வேண்டும் மண்ணை

முளைத்திட்டச் செடியோ அன்றி

முற்றிய மரமே காக்கும்.

No comments: