Sunday, March 29, 2026
ஆரஞ்சு அழகு
Friday, October 10, 2025
காலை நேரம், காத்திருந்த நிலவு
கொல்லைப்புற வாசல் திறந்ததும்
காத்திருந்தது வெண்ணிலவு
விடியலைத் தாண்டியும்
வாழ்த்துச் சொல்ல
வந்தது …
"பெண்ணே
பிறந்த நாள் வாழ்த்துகள்"!!!
நீயும் என்னைப் போல்
இருப்பாயாக!!
இருளையும்
அழகாக்கும்
வலிமை பெற்றிருப்பாயாக!
சூரிய ஒளியை
இதமாக்கி
தருவது போல்
உன் அனுபவங்களை
அர்த்தமாக்கி
அனைவருக்கும் தருவாயாக!
நட்சத்திரங்கள் அழகுதான்
மின்னுபவைத் தான்
என்றாலும்
உனக்கென்று
உள்ள ஒளியை
பிரகாசமாக்கிக் கொள்!
அதிலும்
அழகு கொட்டிக்கிடக்கிறது!
கஷ்டங்கள் உன்னைத்
தேய்த்து மறைத்தாலும்
மீண்டும் எழும்
நெஞ்சம் கொள்!!!
வாழ்த்துச் சொல்லி
மென்மையாக மறைந்தது நிலவு!
நிலவே!
நன்றி!
உன்னைப் போலவே
அமைதியாக,
மனத்தில் அழகாக
வாழ வாழ்த்தியமைக்கு
நன்றி !!!
பிரிய மனமில்லாமல்
இரவை, நிலவை,
எதிர்பார்த்து…
நான்….
Wednesday, July 30, 2025
பட்டுத் தெளியாமல் விட்டு விடாது
(வைரமுத்து அவர்கள், திரைப்படத்துறையில் இருந்தபடி திரைப்படங்கள் குறித்து விமர்சனமாய் எழுதிய `தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’ என்ற கவிதையில் சினிமா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து,
இளைஞர்களின் கைகளிலேனும் இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? சற்று பொறுத்திருப்போம். இல்லையெனில் மக்களைச் சுருள வைக்கும் திரைப்படச் சுருளை ஒரு தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்
என்று எழுதியிருந்ததை பார்த்ததும் எனக்கு இப்படி எழுத தோன்றியது..)
அழுக்குப் பிடித்த
வெள்ளித் திரையை
வெளுக்க
இளைஞர்களெல்லாம்
டிஜிட்டல் அறையில்
கூடினார்கள்…
புதிய பார்வை
புதிய குறிக்கோள்
இயல்பான
அற்புதமான நடிப்பு
ஆண் பெண்
பேதமில்லை
கூட்டாக அனைவரும் கூடி
சில
படைப்புகளை
டிஜிட்டலில்
தந்தார்கள்..
பார்த்தது
வெள்ளித்திரை...
எதிர்த்தது!!
முடியவில்லை…
எப்படி
சமாளிப்பது
வெள்ளித் திரை
மாற்றம் பெற்று
டிஜிட்டலில் இறங்கியது…
ஓடிடியில்
ஒளிவு மறைவின்றி
போட்டுக் காண்பித்தது
தணிக்கை குழு
இல்லை…
கண்காணிக்க
ஏதுமில்லை
ஒவ்வொறுவர்
தொலைபேசியிலும்
வக்கிரம்
வலைவிரித்தாடியது…
கோபம்,கொலை
காதல், காமம்
இரத்தம்
அனைத்தும்
அதிகமாக
மிக அதிகமாக
சற்று
தெளிந்தவர்
திசையறிந்து கொண்டார்
நல்லதும் கொட்டதும்
பிறித்தாய்ந்து கொண்டார்..
இளையவர் பலரோ
இதில் மாட்டிக் கொண்டனர்…
எப்பொழுதும்
ஏதோ ஒன்றை
தொலைபேசியில்
பார்த்துக் கொண்டே
குடும்பம்
அன்பு
பக்கத்தில் இருப்பவர்
புத்தகம் படிப்பது
இப்படி
அனைத்தும் மறந்து
அயல் நாட்டு
மோகத்தில்
உணவு
உடை பழக்கம்
அனைத்தும் மாற
தாய் மொழி மாற
தாயும் தந்தையும்
முதியவர் இல்லம் தேட
மாறிப் போனது
எல்லாம் மாறிப் போனது…
டிஜிட்டல் துறையில்
ஒருபடி ஏறிய
நிலையில்
பலப்படி
இறக்கமும்
கண்டது
இந்தியா…
இன்றும் சிலர்
“இதுவும் கடந்து போகும்”
என்பதில்
நம்பிக்கையோடு….
“பட்டுத் தெளியாமல் விட்டு விடாது”
என்பதால்
பழைய
பழக்கங்களை
டிஜிட்டலில் ஏற்றியபடி…
Tuesday, July 29, 2025
Saturday, July 26, 2025
அந்தி வானம்
அந்தி வானம்…
நிலா
பெண்ணை
வண்ண
கோலமிட்டு
அழைக்கிறது
அந்தி…
இரவு
சீவி முடித்து
சில பூக்களைச்
சொறுகியிருக்கிறதோ!!!
இரவே
எங்கே வைத்தாய்
நட்சத்திர புள்ளிகளை!
வண்ணத்தோடு
கோலமிட காத்துகிடக்கிறது
வானம்...
கருப்பும் வெளுப்புமாய்
சில மேகங்கள்
நீலமாய் சிறு வானம்
மஞ்சளாய்
ஆரஞ்சு நிறமாய்
சிவப்பாய்
சிரிக்கும் அந்தி
இங்கென்ன
ஐபிஎல்
மட்டைப்பந்தா
நடக்கிறது….
நிலா பெண்ணின்
வீட்டை
அலங்காரம்
செய்கிறதோ!
அந்தி...
மிகப் பெரிய
இரங்கோலி
அந்தி வானம்...
Thursday, July 24, 2025
தீதும் நன்றும்
இடிக்கின்ற மேகம் மின்னல்
இசையோடு கருவி வானம்
கொடுக்கின்ற மழையின் தூறல்
கொள்கின்ற தன்மை யாலே
குடிக்கின்ற நீரும் ஆகும்
குழம்பியதே சேறும் ஆகும்
பெறுகின்ற இயல்பி னாலே
பெற்றதன் நன்மை
மாறும்
வருகின்ற தீதும் நன்றும்
வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்
தருகின்ற தீமை தன்னை
தண்ணீரைப் போலே ஏற்பாய்
கிடைக்கின்ற அனுப வந்தான்
கற்கின்ற பாடம் ஆகும்!!
போகின்ற திசைகள் எல்லாம்
புகழோடு வாழ வைக்கும்…
Tuesday, March 04, 2025
எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல…
போட்டி
சில
சமையம்
ஒரு
நல்ல சந்தர்ப்பமாக
அமையலாம்
கவிதை
படைக்க…
அனால்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல
மனத்தில்
எழும்
ஒரு
நொடி சிந்தனை
கவிதையாய்
வெளிப்படும்…
காதலே
ஆனாலும்,
கற்பனை
மனத்தில்
கருவானால்
தான்
கவிதை
ஆகும்
செந்தமிழ்
சொல்லும்
தெளிந்த
சிந்தனையும்
சேர்ந்தால்
மட்டுமே
கற்பனை
சிறகடித்து
வானம்
தொடும்
கவிதைப்பூ
மலரும்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல
நெஞ்சில்
மலர்ந்த
விதையின்
துளிர்கள்
சிந்தனை
சிற்பியில்
உருவான
முத்துக்கள்…
கற்பனை
வானின்
நட்சத்திரங்கள்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல…
Tuesday, February 18, 2025
அப்பாடா...!
அன்று
அம்மா மடி விட்டு
ஓட ஆரம்பித்தேன்…
இளமையில்
இன்பங்கள் அனைத்தும்
துய்த்தேன்…
குடும்பம் குழந்தைகள்
கடமைகள் கடந்து
வந்தேன்…
துன்பங்களும்
எனக்கு
துணையானதைக்
கண்டேன்.
திரும்பிப் பார்க்கும் போது
எனது
இரகசியங்கள்
எனைக் கண்டு
சிரிப்பதைப்
பார்க்கிறேன்…
நான் வாங்கிய
முதல் வண்டி…
எனது கடைசி
பயணத்திற்கு
உதவாது …
எனது
சொத்துக்கள்
கைமாறிப்போகும்…
என்னுடன்
துணையாக
என் துணைவியும்
வரயியலாது….
இனி
எதற்கு
என்னுடையது என்று ஒன்று
எனது
இருப்பை
நியாயப்படுத்த
இனி ஈயப் போகிறேன்…
சிறுவர்களுக்கு
கல்வி
பெரியவர்களுக்கு
உணவு
முயற்சி செய்பவருக்கு
இயன்ற உதவி
எனது
இருப்பை
நியாயப்படுத்த
இனி ஈயப் போகிறேன்…
அப்பாடா…
இப்பொழுதுதான்
நான் எனக்காக
வாழ்கிறேன்…
Tuesday, November 05, 2024
கீதாஞ்சலி 9
மதியில்லாதவனே
உன்னையே நீ ஏன் சுமக்கிறாய்
பிச்சைக் காரனே
உன் கதவண்டையே
ஏன் பிச்சை
கேட்கிறாய்..
உனது துன்பங்களை
எதையும் தாங்கும்
இறைவனிடமே
விட்டுவிடு…
வருந்தி
திரும்பிப் பார்க்காதே…
உனது ஆசை
உனது உள்ளொளியை
அணைத்துவிடுகிறது..
அந்த
புனிதமற்ற நிலை
வேண்டாம்
உண்மை அன்புடன்
தரும் கொடைகளையே
நீ பெற்றுக்கொள்
கீதாஞ்சலி 8
Tuesday, June 04, 2024
கீதாஞ்சலி 7
கீதாஞ்சலி 6
கீதாஞ்சலி 5
இறவனின் சிந்தனையில்
சிறிது நேரம்
தியானிக்க வேண்டும்..
லௌகீக விஷயங்களை
பிறகு சிந்திக்கலாம்.
இறைவா
உன்னை
நான் தியானிக்க வேண்டும்…
உன்னைச் சிந்திக்காத
நிமிடங்கள்
என் நெஞ்சில்
அமைதியின்றிப் போகிறது.
நான் துன்பக்கடலில்
சிக்கித் தவிக்கிறேன்…
இறைவா
இதுவே தருணம்
இந்த அமைதியான
நேரத்தில்
உன்னை தியானிக்க
வேண்டும்
Wednesday, April 10, 2024
கீதாஞ்சலி 4
இறைவா
நீ எங்கும் நிறைந்திருப்பவன்
எனவே
நீ வாழும்
இவ்வுடலை
மிகவும் பரிசுத்தமாக
வைத்திருக்க முயல்கிறேன்…
பகுத்தறிவை எனக்குள்
விதைத்தவன் நீ
எனவே
எனது சிந்தனையிலிருந்து
பொய்களை
விலக்கிடுவேன்…
எனது உள்ளத்தில்
நீ உறைந்திருக்கிறாய்
எனவே
எனது உள்ளத்திலிருந்து
தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி
அன்பை வெளிப்படுத்த முற்படுவேன்
எனது
செயல்களுக்கெல்லாம்
வலிமையை நீயே தருகிறாய்
எனவே
எனது செயல்களின் மூலமே
உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்
Sunday, April 07, 2024
கீதாஞ்சலி 3
இறைவா!
அற்புதமான
உனது இசையை
நீ
எப்படி இசைக்கிறாய்..
நான் அமைதியோடு
ஆச்சரியத்தில்
மூழ்கிபோகிறேன்..
உனது இசையின்
ஒளி
இவ் உலகையே
வெளிச்சமாக்குகிறதே!
உனது இசை
வானவெளியெங்கும்
பரவியிருக்கிறதே!
உனது
இசையின் பெருவெள்ளம்
கடினமான
பாறைகளையும்
உடைத்து
பெருகுகிறதே!
உனது இசையோடு
இசைக்க
நானும் எண்ணுகிறேன்
ஆனால்
வார்த்தையின்றி
தவிக்கிறேன்.
எனது
வார்த்தைகள்
கவிதையாய்
பரிணமிக்க முடிவதில்லை.
அதனால்
பரிதவிக்கின்றேன்
இறைவா
உனது
இசையின்
முடிவற்ற வலைக்குள்ளே
என் இதயம்
சிக்குண்டுவிட்டதே!
தாகூர்
இயற்கை வழியாக
இறைவனைப் பார்க்கிறார்.
இயற்கையின்
ஒவ்வொரு அழகும்
இறைவனை காட்டுவதல்லவா!
அதனால் தான்
பாரதியும்
காக்கை சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரிய நிறம்
தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும்
மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம்
தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில்
எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா
நந்தலாலா
தீக்குள் விரலை
வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா
என்கிறார் போலும்.
தொடர்வோம்..
Friday, April 05, 2024
கீதாஞ்சலி 2
உன்னைப் பாட
என்னைப் பணிக்கும் பொழுது
எனது நெஞ்சம்
பெருமையால்
அடைத்துக் கொள்கிறதே!
உனது திருமுகத்தை
கண்டதும் எனது
கண்ணில் நீர்
பெருக்கெடுக்கிறதே!
எனது வாழ்வின்
கஷ்ட நட்டங்கள்
ஒன்றாகி
இனிமையான பாடலாக
வெளிவருகிறதே!
மகிழ்ச்சில் திளைக்கும் பறவை
கடலைத் தாண்டி
உல்லாசமாகப் பறப்பதைப் போல்
உனதன்பால் என் சிந்தனை
சிறகடிகிறதே!
உன் முன்
ஒரு கவிஞனாகவே
நான் நிற்கிறேன்
எனது கவிதையில்
நீ மகிழ்வாய்
என்று எனக்குத் தெரியும்
எனது இசையின்
மெல்லிய அலைகளின்
ஸ்பரிசத்தால்
உன்னைத் தொட்டு
இன்பமடைகிறேன்…
இறைவா
அந்த இன்ப மயக்கத்தில்
என்னை மறந்து
உன்னை
‘நண்பனே’
என்றழைகிறேனே!
நீ
இறைவனல்லவா!
அதனால் தான் பாரதியும்
பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்
"எண்ணமிட்டாலே போதும்
எண்ணுவதே இவ் இன்பத்
தண் அமுதை உள்ளேஎங்கும் நிறைந்திருந்த ஈச
என்று பாடுகிறாரோ!
கீதாஞ்சலி 1
கீதாஞ்சலி
தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.
1.
இந்த முடிவற்ற பிறவியில்
என்னை
பிணித்திருக்கிறாயே
அதுவே உன் இச்சை போலும்.
மிகவும் பலவீனமான
இப்பாண்டத்தை
அடிக்கடி
வெறுமையாக்கி
மீண்டும் மீண்டும்
புத்துயிரை
நிரப்புகிறாய்
உனது சின்னஞ்சிறு
குழலில்
அமுத கானத்தை
காடு, மலை,
பள்ளத்தாக்கெங்கிலும்
இசைக்கிறாய்
உனது திருக்கரம்
தீண்டியதில்
எனது நெஞ்சம்
இன்பத்தின் எல்லையையே
தாண்டி விடுகிறதே!!!
உனது பெருமையை
பாடத் துவங்குகிறதே!!!
எனது சின்னஞ் சிறிய
கைகள் நிரம்பி வழியும் படி
பல அரிய கொடைகளை
நீ தருகிறாய்..
உனது கருணை
அளப்பரியது..
பல காலங்களாய்
தொடர்வது..
இன்னும்
முடியாமல்
தொடர்ந்து கொண்டே
இருப்பது…
பாரதியும் அதனால் தான்..
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
என்று பாடுகிறார்...
தொடர்வோம்..
Thursday, April 04, 2024
வேண்டுதல்
இறைவா
இம்மலரை
இப்பொழுதே பறித்து
எடுத்துக் கொள்
ஒருவேளை
இம்மலர்
தாழ்ந்து
தூசியில் விழுந்துவிடுமோ
என்று அஞ்சுகிறேன்.
உனது மாலையில்
இம்மலருக்கு
இடமில்லாமல்
போகலாம்
ஆனாலும்
அருளோடு
உனது திருக்கைகளால்
பறித்துக் கொள்வதே
பேரானந்தம்
உணர்வதற்கு
முன்பே,
முழுவதுமாக
அர்ப்பணிக்கும் முன்பே
காலம்
கடந்து விடுமோ!
இறைவா
இந்த மலரில்
வண்ணம் நீங்கி இருக்கலாம்,
மணம் மங்கி இருக்கலாம்
அனாலும்
உனது திருப்பணிக்காக
இப்பொழுதே
இம்மலரை
ஏற்றுக் கொள்ளுங்களேன்.
தனது ஆன்மாவையே மலராக
இறைவனுக்கு அளிக்கும்
தாகூரின் பாடல்
Gitanjali, Rabindranath Tagore
Pluck this little flower and take it,
delay not! I fear lest it droop and
drop into the dust.
It may not find a place in thy garland,
but honour it with a touch of pain
from thy hand and pluck it.
I fear lest the day end
before I am aware,
and the time of offering go by.
Though its colour be not deep and
its smell be faint,
use this flower in thy service and
pluck it while there is time.
Wednesday, April 03, 2024
தேடல்
I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?
Thursday, September 14, 2023
நிலவே!!!
நிலவே!
உன்னை நாங்கள்
அடைந்து விட்டோம்!
எவ்வளவு ஆனந்தம்
எங்களுக்கு!!
இந்திய மக்களின்
இதயத் துடிப்பல்லவா
நீ!
எங்கள் பாட்டிமார்கள்
உன்னைக் காட்டித்தான்
தம் பிள்ளைகளுக்கு
உணவளித்தார்கள்
எங்கள் தாய்மார்களோ!
நிலா நிலா ஓடிவா!
என்று உன்னைத்
துணைக்கழைத்தார்கள்...
நாங்களோ !
உன்னை அடைந்தே விட்டோம்..
எவ்வளவு ஆனந்தம்
எங்களுக்கு!!
ஒருவேளை
நாளை எம் பிள்ளைகள்
உன்னை
சொந்தம் கொண்டாடுவார்களோ!
நிலவே
உனக்கும்
எங்களுக்குமான
இந்த இடைவெளியை
அன்று
கற்பனையால் கடந்தோம்..
இன்று
அறிவியலால் அளந்தோம்..
நிலவே
உன் அழகு
இன்றும் எங்களை
வசப்படுத்துகிறது..
எங்கள் குழந்தைகளுக்கு
கற்பனையை
கலையை
உன்மூலமாகத்தான்
சொல்லித்தருகிறோம்…
எங்கள் காதலுக்கும்
கவிதைக்கும்
நீயே அடிப்படை…
ஆனாலும்
நிலவே!
சற்று தள்ளி
நில்
மனிதனை
அருகில் வரவிடாதே!
உன் அழகு
கனிமங்களை
அவன்
அள்ளிக் கொள்ளலாம்…
அழகிய பூமியில்
ஆயிரம்
கோடுகள்
கிழித்தவர்கள்
நாங்கள்..
இன்றும்
நடந்துக் கொண்டே
இருக்கிறது
கோடுகளுக்கான
சண்டை …
உன்னையும்
துண்டாடவிடாதே!
வடதுருவம்
தென் துருவம்
என்று
இப்பொழுதே
துண்டாடுகிறார்கள்..
மனிதனை
அண்டவிடாதே!
எங்கள் சந்திராயனைத்
தூங்கவிட்டுவிடு
சந்திரனே!
உன் அழகை
கனிமங்களை
மனித இச்சைக்கு
அளித்துவிடாதே!
ஆசைக்கு
அளவில்லாதவர்கள்
நாங்கள்
நிலவே!
அழகே!
உன்னைத் தொட்ட
எங்கள்
இதயத்தில்
உன் காதல்
என்றும் நிலைத்திருக்கும்…
எங்கள்
ஓவியத்திற்கு
வடிவமாய்
கவிதைக்குப்
பொருளாய்..
காதலுக்கு
துணையாய்
மட்டுமல்ல
எங்கள்
அறிவியல் அறிவிற்கும்
சாட்சியாய்..
என்றும், என்றும்
நீயே…
நிலவே !!!