Monday, July 27, 2009

குறும்பட வெண்பா.

தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
மூடியத வள்மன து.

குறும்படம் காண
http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls



மற்றொறு வெண்பா

கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)

எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட

எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்

மனதிலுள்ள் தேகறுப் பு.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

காணோளியும் வெண்பாவும் நன்றாக வந்துள்ளது

Vidhoosh said...

அருமை தோழி.

உமா said...

மிக்க நன்றி ஞானசேகரன்.

உமா said...

நன்றி,நன்றி பல. உங்கள் ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.நன்றி.

வலசு - வேலணை said...

மிக அருமையான காணொளி
அதற்கேற்ப உங்கள் வெண்பா.
வாழ்த்துக்கள்

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. வலசு - வேலணை.